districts

img

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

சென்னை, டிச.11- சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட படகு கள் மாண்டஸ் புயல் தாக்கி யதால் சேதம் அடைந்தன. சென்னையின் முக்கிய மீன்பிடி துறைமுகமாக இருப்பது காசிமேடு. இங்கு 1,300-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான பைபர் படகுகளும், 850-க்கும் மேற்பட்ட கட்டு மரங்களும் உள்ளன. இங்கு தினமும் 1,000 டன் மீன் வரத்து மூலம் ரூ.50 கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. வங்கக் கடலில் உரு வான ‘மாண்டஸ்’ புயல், சனிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.அப்போது பலத்த காற்று வீசியது. இதில், காசி மேடு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. இத னால், மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த படகு உரிமை யாளர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை காசி மேடு மீன்பிடி துறை முகத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட படகுகளை பார்வையிட்டு, மீனவர்க ளுக்கு ஆறுதல் கூறினார்.
மீனவர்கள் வேதனை
இந்நிலையில் காசி மேடு துறைமுகத்தில் படகு கள் சேதம் அடைந்துள்ள தால் மீனவர்கள் பலர் வேத னையடைந்துள்ளனர். இது குறித்து மீனவர்கள் சில கூறுகையில், ஒவ்வொரு புயலின்போதும் காசிமேடு மீன்பிடி துறை முகம் பாதிக்கப்பட்டு வரு கிறது. புயல் எச்சரிக்கை காரணமாக யாரும் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வில்லை. படகுகளையும் கரையில் பத்திரமாக கட்டி வைத்தோம். நள்ளிர வில் புயல் கரையை கடந்தபோது வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி, கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில், 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. 3 விசைப் படகுகள் கடலில் மூழ்கியுள்ளன. புயலால் எங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்த படகுகளை சீரமைத்த பிறகுதான் மீண்டும் மீன்பிடி தொழி லுக்குச் செல்ல முடியும். எனவே, மாநில அரசு உடனடியாக சேதம் அடைந்த படகுகளை கணக்கெடுத்து உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதிகாரிகள் கணக்கெடுப்பு
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “காசி மேட்டில் சேதம் அடைந்த படகுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடைந்ததும் நிவாரணத் தொகை வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றனர்.