districts

ஆவடியில், பாதாள சாக்கடை திட்டம் ஆக. 7இல் கலந்தாய்வு கூட்டம்

அம்பத்தூர், ஆக. 5-

    ஆவடியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் வரும் திங்கட்கிழமை (ஆக. 7) நடை பெற உள்ளது.

   ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இவற்றை  4 மண்டலங்களாக பிரித்துள்ளனர். குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அதற்கான சமூக சுற்று ச்சூழல் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

   இந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் வரும் திங்கட்கிழமை (ஆக. 7) காலை 11 மணி அளவில் ஆவடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களுடைய மேலான கருத்துக்களை தெரி விக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.