3 மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு நிறுவன அங்காடிகள்
சென்னை, ஜூன் 19- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை பயணமாக சென்றபோது லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது தமிழகத்தில் லுலு நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் லக்ஷ்மி மில் பகுதியில் லுலு ஹைப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. சென்னையில் லுலு மால் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் எங்கு எப்போது வரும் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வரும் என்று கூறப்பட்டது. இசிஆரில் ஈஞ்சம்பாக்கத்தில் லுலு மால் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்த பிரார்த்தனா தியேட்டர் இருந்த இடத்தில் லுலு மால் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் 3 லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள் அமைப்பதற்கு மெட்ரோவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. மக்கள் அதிக நடமாட்டம் உள்ள சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையம், ஷெனாய் நகர், விம்கோ நகர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கு திட்ட மிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரேஸ் சர்வீஸ் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் நிலையத்தில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது
. ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலை யத்தின் அடிதளத்தில் 1 லட்சம் சதுர அடியில் ஹைப்பர் மார்க்கெட் அமைய உள்ளது. அதேபோல் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே 40 ஆயிரம் சதுர அடியிலும், விம்கோ நகர் மேற்பரப்பில் லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
சென்னை, ஜூன் 19- சென்னை ராயபுரத்தில் தேநீர் கடையின் பூட்டை உடைத்து, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் வைகுண்ட தெருவை சேர்ந்தவர் நந்த கோபால் (50). இவர் அங்குள்ள தொப்பை தெருவில் டீக்கடை நடத்தி வருகிறார்.
செவ்வாயன்று இரவு வியா பாரம் முடிந்து நந்தகோபால் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம்போல் புதன்கிழமை காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டி ருப்ப்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது.