மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த கேவிஎஸ் தொழிலதிபர் சீனிவாசன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தற்போது, ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகனிடம் மாவட்ட ஆட்சியர் சரயு முன்னிலையில் வழங்கினார்.