districts

img

கடன்தொல்லையால் உயிரிழந்த நெசவாளர் குடும்பத்திற்கு உதவி

காஞ்சிபுரம், ஜூலை 9  காஞ்சிபுரத்தில் கடன் தொல்லையால் மன முடைந்து சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நெசவாளர் ஜி.மணி குடும்பத்தினருக்கு மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. செவ்வாய்கிழமை யன்று (ஜூலை.9) தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரி மைகளுக்கான சங்கத்தினர் மணியின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தி னருக்கு  ஆறுதல் தெரி வித்தனர். மேலும் அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.ப.பாலாஜி, பொரு ளாளர் அரிகிருஷ்ணன், காஞ்சிபுரம் ஒன்றிய செய லாளர் வி.பாலாஜி, நகர தலைவர் எம்.லோகநாயகி, நிர்வாகிகள் சாந்தி, லட்சு மணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதேபோன்று நலம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் மணியின் மகள்களின் கல்வி செலவிற்கு ரூபாய் பத்தாயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.