கள்ளக்குறிச்சி,ஜூலை 28-
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது மாநாடு ரிஷிவந்தியத்தில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் மூசா மற்றும் பலர் உரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் அ.பா.பெரியசாமி தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலைவர் எ.ஷாயின்ஷா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ். ஆரோக்கியதாஸ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் ஐ.ஷேக்சலாவுதீன் அறிக்கை சமர்பித்தார்.
சிறுபான்மை மற்றும் பட்டியல் இன மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், சிறுபான்மையினரின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும், கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டையொட்டி, மத நல்லி ணக்கம், மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் சுந்தரவள்ளி உரை யாற்றினார். முன்னதாக, கள்ளக்குறிச்சி குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.