districts

img

பட்டாவை அடங்களில் ஏற்றக் கோரி...

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கள்ளபிரான்புரம் ஊராட்சி வள்ளுவப்பாக்கம் கிராமம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை அடங்களில் ஏற்றிட வலியுறுத்தி கிராம மக்கள் சிபிஎம் உடன் இணைந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் வட்டாட்சியரிடம் மனுக்களை வழங்கினர். கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ். ராஜா மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.மாசிலாமணி, எம்.எஸ்.அர்ஜுன் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.