சென்னை, ஜூலை 21-
மாலத்தீவில் உள்ள துலிஸ்தூ தீவில் நடைபெற்ற ஆசிய அலைசறுக்கு (சர்ஃபிங்) சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த போட்டியில் ஆசியாவில் இருந்து 18 நாடுகள் பங்கேற்றன. இந்திய ஆண்கள் பிரிவில் 4 சீனியர் மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 2 பேர் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம்பெற்ற 6 பேரில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் கோவளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி யது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியினர் பங்களிப்பு குறித்து இந்திய அலைசறுக்கு சம்மேளன தலைவர் அருண் வாசு கூறுகையில். குறுகிய காலத்தில் இந்திய அணியினர் புரிந்த மிகப்பெரிய சாதனை என்றார். தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை, நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் உலக அலை சறுக்கு லீக் போட்டிக்கு இந்திய வீர்ர்கள் தயாராகி வருவதாக வும் அவர் கூறினார்.