நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள கலைஞர் திடலில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்கள் இரா.சுமந்த்-சா.தனரஞ்சினி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வே.கணேசன், சிவசங்கரன், செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், எம்.ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.