திருக்கோவலூர், ஆக.11-
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் மாணவர்களுக்கு ‘பண்டைத் தமிழ்ச் சமூகம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
போட்டியை தலைமையாசிரியர் கே.வி.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். நல் நூலகர் மு. அன்பழகன், முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு மைய நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் மாணவிகளுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கினார்.