வேலூர், ஆக.26- வேலூர் விஐடி பல்கலைக்கழகம், தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கு.வணங்காமுடி வரவேற்றார். இவ்விழாவில் அமைச்சர் துரை முருகன், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் கனி மொழி, கவிஞர் வைரமுத்து அமைச்சர் ஆர்.காந்தி, முரசொலி செல்வம், மக்களவை உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக கலைஞர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர். மேலும் கலைஞருடன் பணியாற்றிய அவரது தனிச் செயலாளர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், உதவியாளர் சண்முக நாதன் குடும்பத்தினர், பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.