districts

img

231 பேர் பயனடைந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம்...

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று (ஆக. 30) மாவட்ட ஆட்சியர்  ஜெ.யு. சந்திரகலா தலைமையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் வசிக்கும் 231 பயனாளிகளுக்கு தலா ரூ.3.5 லட்சம் வீதம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பா. ஜெயசுதா, ஒன்றியக் குழுத் தலைவர் சே. வெங்கட்ரமணன், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.