districts

img

மக்கள் ஒற்றுமைக்கான கலைப் பயணம்

கோவை, டிச.16-  இந்திய மக்களின் ஒற்றுமை  மற்றும்  மத நல்லிணக்கம் ஆகிய நோக்கங் களை பரப்புரை செய்யும் வகையில்  அன்பிலதனை அறம் கலைப்பய ணத்திற்கு கோவையில் எழுச்சிமிகு வர வேற்பு அளிக்கப்பட்டது.  இந்திய மக்கள் நாடகமன்றம் முன்னெடுத்துள்ள இந்த அகில இந்திய  கலைப்பயணத்தின் ஒரு பகுதியாக தமி ழகத்தில் சென்னையில் துவங்கிய  கலைப்பயணம், பல்வேறு மாவட்டங் களின் வழியாக “அன்பிலதனை அறம்   எனும் கலைக்குழு டிசம்பர் 15 வெள்ளிகி ழமை அன்று கோவை மாநகருக்கு வந் தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், திராவிடர் கழ கம், திராவிடர் விடுதலை கழகம், இந் திய ஒற்றுமை இயக்கம், பூவுலகின் நண் பர்கள், விடுதலை கலை இலக்கிய பேர வை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்நிகழ்வை நடத்தியது.  இப்பயணத்தில் புகழ் பெற்ற முற் போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்றனர். இப்பயணக்குழுவிற்கு காலை 11 மணி வடவள்ளி  பேருந்து  நிலையம் அருகே சிறப்பான எழுச் சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 4  மணிக்கு காந்திபுரம்  தந்தை பெரியார் படிப்பகம் முன்பிருந்து டாடாபாத் பவர்ஹவுஸ் வரை  கலைப்பேரணியும்  இதனைத்தொ டர்ந்து மாலை 5 மணிக்கு வடகோவை குஜராத்தி சமாஜத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ப.பா. ரமணி  தலைமையில் கலை நிகழ்ச்சிள் நடை பெற்றது. இந்நிகழ்வை  தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மக்கள் சிவில் உரி மை கழகத்தின் பாலமுருகன், மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் யு.கே.சிவஞா னம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் தி.மணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.  வெறுப்பை விரட்டி அன்பை விதைக்க  பறை இசை, மக்களிசை, ராப்  இசை, கலைஞர்களின் இசைப்பா டல்கள், கானா, நடனம், வீதி நாடகங்கள்  எனப் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இந்த பயணக்குழுவில் சென்னை கலைக்குழு பிரளயன் எழுத்தாளர் கவின் மலர், கவிஞர் சுகிர்தராணி, புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உமா, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் அருள் மணி, அசோக்சிங் மற்றும் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.