districts

img

ராணிப்பேட்டையில் கலைத்திருவிழா போட்டிகள்

ராணிப்பேட்டை, நவ. 11 –  ராணிப்பேட்டை மாவட்டம், வி.ஆர்.வி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் திங்களன்று (நவ. 11) துவங்கியது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்வில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீம. ரமேஷ் கர்ணா, மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வினோத், தலைமையாசிரியர் ஈவ்லின் சத்யபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.