districts

2 மாதங்களுக்கு பிறகு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

சென்னை, பிப்.21 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களாக உள்ள கல்லூரி கள் தவிர மற்ற கல்லூரிகள் அனைத்தும் திங்கட்கிழமை (பிப்.21) திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக டிசம்பர் 24-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்ததால் ஜனவரி  31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப் பட்டது. செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. அரசின் தடுப்பு நடவடிக்கை யால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து  கடந்த 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும்  திறக்கப்பட்டன. ஆனால் ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப் பட்டதால் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. 1-ந் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தேர்வு எழுதி விடைகளை ஆன்லைன் வழியில் கல்லூரிகளுக்கு அனுப்பினர். பெரும்பாலான கல்லூரிகளில் 18-ந்  தேதியுடன் தேர்வுகள் முடிந்தன. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களாக உள்ள கல்லூரிகள் தவிர  மற்ற கல்லூரிகள் அனைத்தும் திறக்கப் பட்டன. 2 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ - மாணவிகள் நேரடி  வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள கல்லூரிகளில், பொறியி யல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு மார்ச் மாதம் வரை தேர்வுகள் நடத்தப்படு கின்றன. அந்த கல்லூரிகளில் தேர்வுகளை  முடித்த மாணவர்களுக்கு மட்டும் நேரடி  வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அவற்றுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. மற்ற பெரும்பாலான கல்லூரிக ளில் நேரடி வகுப்புகள் தொடங்கின.