districts

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை, ஆக. 26 -

      ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அரக்கோணத்தை சேர்ந்த குற்றவாளிகள் குருபிரசாத், கவுதம், ஜெகன், பன்னீர்செல்வம் ஆகியோர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் பாரதி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன் பேரில்  குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.