சென்னை,அக்.17- குற்றச்செயல்களை முன் கூட்டியே தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவை அதிகம் நடை பெறும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதி களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து செல்ல காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதை யடுத்து அதற்கான பணி தொடங்கி உள்ளது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றங்க ளையும் முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் பல்வேறு தொடர் நட வடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக குற்றம் அதிகம் நடை பெறும் இடங்கள், குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கான காரணம் என்ன என ஆய்வு செய்யப்படுகிறது. பின்னர், அதை அடிப்படையாக வைத்து அப்பகுதியில் போலீஸ் பாது காப்பு மற்றும் ரோந்து பணி அதிகரிக் கப்படுகிறது. அதோடு மட்டும் அல்லா மல் குற்றச்செயல்கள் அதிகம் நடை பெறும் பகுதிகளில் அதிகளவு கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு போலீஸார் கண்காணிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் குறைவான பகுதி வழியாகச் செல்வோரின் உயிரு க்கும், உடைமைக்கும் அவ்வப்போது ஆபத்தும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கச் செல்லும் காவலர்கள் சமூக விரோதி களால் தாக்குதலுக்கும் உள்ளாகின்ற னர். இவற்றை எல்லாம் தடுக்கும் வகை யில், குற்றம் அதி கம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து, மக்க ளுக்குப் பாதுகாப்பு உணர்வை அதி கரிக்கும் வகையில் போலீஸார் துப் பாக்கி ஏந்தி ரோந்து செல்ல வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வாய்மொழி உத்தரவு பிறப்பிததார். இதையடுத்து காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), ஆஸ்ரா கர்க் (வடக்கு) ஆகி யோரின் நேரடி மேற்பார்வையில் போலீ ஸார் துப்பாக்கி ஏந்தி ரோந்து செல்கின் றனர். குறிப்பாக அடையாறு காவல் மாவட்டத்தில் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் தலைமையில் போலீஸார் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.