districts

img

பட்டு ஜவுளி பூங்காவுக்கு காத்திருக்கும் ஆரணி தொகுதி நெசவாளர்கள்

திருவண்ணாமலை, மார்ச் 21- தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளின் வரிசையில் 12 வது இடத்தில்  ஆரணி நாடாளுமன்ற தொகுதி உள்ளது.  இந்த தொகுதி விவசாயத் தொழிலை பிரதானமாக கொண்டுள் ளது.  ஆரணி,செய்யார் பகுதியில்  கைத்தறி பட்டு நெசவு தொழிலும், ஆரணியும் களம்பூரும் அரிசி உற்பத்தியில் புகழ்பெற்ற நகரங்க ளாக உள்ளன. 

வரலாற்று புகழ்பெற்ற வந்தவாசி

ஆரணியில் உற்பத்தியாகும் பட்டுச் சேலைகளும், அரிசியும் உள் நாடு  மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1760ல்  நடைபெற்ற வந்தவாசி  போரில் பிரெஞ்ச் படையை ஆங்கில படை வென்றதால் பிரெஞ்சு படை இந்தியாவை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது. வந்தவாசி போர் இந்த வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டை யும் ஆரணி மக்களவை தொகுதியில்  உள்ளது.   மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிய நாமக்கட்டி உற்பத்தி செய்யும் ஜடேரியும்  சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற முடையூர், தெருக்கூத்து நாடகக்கலை அழியாமல் இன்றும் சிறந்து விளங்கும் புரிசை கிராமமும் இந்த தொகுதியில் தான் அமைந்துள் ளது. திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ள போளூர், ஆரணி, வந்த வாசி(தனி), செய்யாறு ஆகிய சட்ட மன்ற தொகுதிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம் ஆகிய இரண்டு தொகுதிகளும் சேர்த்து 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய  ஆரணி மக்களவைத் தொகுதியில் 7 லட்சத்து 31ஆயிரத்து 824 ஆண் வாக்காளர்களும் 7 லட்சத்து 58ஆயிரத்து 417 பெண் வாக்காளர்களும்,  109 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரத்து 350   வாக்காளர்கள் உள்ளனர்.

மறுசீரமைப்பு

ஆரணி நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி தொகுதியாக இருந்தபோது முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் இத்தொகுதி யில் நின்று வெற்றி பெற்றார். இத்தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனித்து நின்றும் , கூட்டணி வைத்தும் 7 முறையும்,  திமுக, அதிமுக,பாமக ஆகிய கட்சிகள் தலா  2 முறையும்,  மதிமுக, தமாக தலா 1 முறையும் இத்தொகுதியில் வெற்றி  பெற்றுள்ளன. கடந்த 2019ல் நடைபெற்ற 17 ஆவது மக்களவை தேர்தலில்  அதிமுக சார்பில் போட்டியிட்ட செஞ்சி ஏழு மலையை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட எம்.கே.விஷ்ணுபிரசாத் 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்று இத்தொகுதி யின் நாடாளுமன்ற உறுப்பினரானார். திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளில் மக்களின் கோரிக்கை களான கூட்டேரிப்பட்டு மேம்பாலம், ஆரணி பட்டு ஜவுளி பூங்கா,திண்டி வனம் முதல் நகரி வரையிலான ரயில்வே திட்டங்கள் செயல்வடிவம் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த அரிசி பூங்கா

ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா அமைக்கவேண்டும், ஒருங்கிணைந்த அரிசி பூங்கா அமைக்கவேண்டும்,  திண்டிவனம் முதல் நகரி வரையி லான ரயில்வே திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,  போளூர் பகுதியில் கரும்பு அதிக அளவில் சாகு படி செய்வதால் சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும், வந்தவாசி பகுதியில் கோரைப்பாய் நூற்பு ஆலை அமைக்கவேண்டும்,  ஆரணி பகுதியில் வேளாண்மை கல்லூரி, காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வசதி  செய்து தர வேண்டும் என்று ஆரணி மக்களவை தொகுதி வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது, ஆரணி  மக்களவைத் தொகுதியின்  திமுக வேட்பாளராக, திருவண்ணாமலை  திமுக வடக்கு மாவட்ட  செயலாளரான எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவிக் கப்பட்டுள்ளார். கடந்த 1986 முதல், வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும்  அவரின் மனைவியும் உள்ளாட்சி தலைவராக, ஒன்றியக் குழு தலைவராக மற்றும் தற்போது கவுன்சிலராக 38 வருடம் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர். 2முறை கூட்டுறவு சங்க தலைவர், 6 முறை ஒன்றிய செயலாளர், 7 வருடம் மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், செய்யாறு கூட்டுறவு சக்கரை ஆலை இயக்கு நர், மற்றும் பட்டிமன்ற பேச்சாள ராக செயல்பட்டு வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் வெற்றி பெற்று, நெல் விவசாயத்தில் சிறந்து விளங்கும் ஆரணி தொகுதியின் மக்கள் கோரிக்கைகளை நிறை வேற்றவார் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். -செந்தாமரைகண்ணன்