ராணிப்பேட்டை, செப்.6 - ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு அலுவலகம் முற்றுகை, ரயில் மறியல் போராட்டம் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மக்களை சந்தித்து பிரச்சார, தெருமுனை கூட்டங்கள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, நெமிலி தாலுகா விற்கு உட்பட்ட பகுதிகளில் 20 மையங்க ளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஏ.பி.எம். சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன், த. ஞான முருகன், எஸ். தென்னரசு, ஆர். வெங்க டேசன், சி. துரைராஜ், ஆட்டோ பாபு ஆகி யோர் கலந்து கொண்டனர். ஆற்காடு பகுதியில் செயலாளர் எஸ். செல்வம் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், பி. ரகுபதி, தாலுகா குழு உறுப்பினர்கள் மதிய ழகன் குமார், கன்னியப்பன், வெங்க டேசன், விஜயன், கோவிந்தராஜ், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.