districts

img

பட்டா வழங்க துணைவட்டாட்சியர் ஒப்புதல்

திருவள்ளூர், செப். 30- பட்டா வழங்க துணை வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர் உறுதியளித்ததால் காத்திருக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மேல்மும் பேடு, சிறுபுழல்பேட்டை எம்ஜிஆர் நகர், பில்லா குப்பம், பன்பாக்கம் ஆகிய கிராமங்களில் குடிமனை பட்டா வழங்க வேண்டும்,  சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் உள்ள பில்லா குப்பத்தில் தனிநபர்கள் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.இதனை மீட்டு குடிமனை இல்லாத அருந்த தியர் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும், மேல்முதலம்பேடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல தலை முறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு 40 குடும்பங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. சர்வே எண் 300 மற்றும் 301 ல் 50க்கும் மேற்பட்டவர்கள் தொகுப்பு வீடுகளை கட்டி வாழ்ந்து வருப வர்களுக்கு  பட்டா வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை சீனிவாசராவ் நினைவு தினமான செப் 30 அன்று பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செப் 30 அன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி தலைவர்களை அழைத்து பேனார். அப்போது துணை வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு வாரத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தார். இதனை தொடர்ந்து காத்தி ருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, செயலாளர் த.கன்னியப்பன், மாவட்ட பொருளாளர் எம்.சிவக்குமார், சிபிஎம் வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்ட குழு உறுப்பினர்கள் ப.லோகநாதன், எம்.சி.சீனு, வி.ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.