இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்புணர்வு செய்த, இந்திய மல்யுத்த கழகத்தின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான யுமானப்ரிஜ் பூஷன் சரண் சிங் உட்பட அதன் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வியாழனன்று (ஏப்- 27) அன்று கும்மிடிப்பூண்டியில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், வட்டச் செயலாளர் எம்.சிவகுமார், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்ட தலைவர் இ.தவமணி, சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.அர்ஜுனன், டி.கோபாலகிருஷ்ணன், வி.குப்பன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன், ஜி.தீட்சண்யா உள்ளிட்ட பலர் பேசினர்.