32 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி வாச்சாத்தி வழக்கில் தீர்ப்பை பெற்ற களப்போராளிகள், வழக்கறிஞர்களுக்கு ஞாயிறன்று (பிப். 4) சைதாப்பேட்டையில் மையம் கலைக்குழு சார்பில் பாராட்டு மற்றும் அனுபவப் பகிர்வு நடைபெற்றது. ஜோன்னா கலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களப் போராளிகள் பெ.சண்முகம், டில்லிபாபு, வழக்கறிஞர்கள் ஜி.சம்கிராஜ், கே.சுப்புராம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அருகில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர் கவுதம்ராஜ், திரைப்பட பாடலாசிரியர் உமாதேவி ஆகியோர் உள்ளனர்.