districts

img

18 இருளர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடு

திருவள்ளூர், பிப்.12- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தனியார் தொண்டு நிறுவனம் 18 குடும்பங்களுக்கும், தொகுப்பு வீடுகளை கட்டி திறப்பு விழா நடத்தப்பட்டதால் இருளர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம்,  கடம்பத்தூர் அருகில் உள்ள பாக்குப்பேட்டை ஊராட்சி யில் பழங்குடி இருளர் இன சேர்ந்த 18 குடும்பங்கள் உள்ளன. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் குடிமனை பட்டா  பெற்று கொடுக்கப்பட்டது. பின்னர் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கையில்லை. மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள்.. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என இந்திய வளர்ச்சி இயக்கம் நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்தனர். இதனை ஏற்று இந்திய வளர்ச்சி இயக்ககம் சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் முடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகளின் திறப்பு விழா பிப் 10 அன்று நடை பெற்றது. நிகழ்ச்சியில் இந்திய வளர்ச்சி இயக்கத்தின் செயலாளர் பாலாஜி,  சம்பத் பொருளாளர் சந்திரா,  இணை செய லாளர் தாமோதரன் ஆகியோர் பங்கேற்ற னர்.  இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி மற்றும் வீட்டுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் வேண்டு கோளை ஏற்று இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து,  திறப்பு விழா நடத்தி, புதிய வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கிய இந்திய வளர்ச்சி இயக்கத்தின் நிர்வாகி களை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, கிளை நிர்வாகிகள் வடிவேலு, நீலா, ராமு மற்றும் இருளர் இன மக்கள் மனதார பாராட்டினர்.