districts

img

தேசிய குதிரையேற்ற சாம்பியன் போட்டி தமிழக அணியினருக்கு பாராட்டு விழா

சென்னை, ஜன.23- குதிரையேற்ற விளை யாட்டுகளில் தேசிய பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய இளம் குதிரை யேற்ற வீர்ர்களின் சிறந்த சாதனைகளை சென்னை குதிரையேற்ற மையம் பாராட்டி கவுரவித்தது.  புதுதில்லியில் நடை பெற்ற ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப்ப 2024 - குதிரையேற்ற போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்று, அனைத்து வயது பிரிவு களிலும் தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்ற சாதனை படைத்தனர். அதேபோல், சர்வதேச குதிரையேற்ற கூட்ட மைப்பு நடத்திய சர்வதேச மேம்பாட்டுப் போட்டியில் ஆசியாவின் சிறந்த இளை ஞர் ரைடராக மிராயா தாதா பாய் வெற்றி பெற்றார். இந்த வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் நடை பெற்றது. இதில் நடிகர் அருண் விஜய் மற்றும் சென்னை குதிரையேற்ற மையத் தலைவர் துருவ ஃபுட்னானி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். இந்த நிகழ்ச்சியில், புதுதில்லியில் நடந்த டிரஸ்ஸேஜ் குதிரையேற்றப் போட்டியில் பங்கேற்று  தங்கள் திறமைகளால் பார்வையாளர்களைக் கவர்ந்த 10 முதல் 18  வயதுக்குட்பட்ட இளம் குதி ரையேற்ற விளையாட்டு வீர ர்கள் கலந்து கொண்டனர்.  டிரஸ்ஸேஜ் என்பது சவாரி செய்பவரின் திறமை மற்றும் துல்லியத்தை மட்டுமல்லா மல், சவாரி செய்பவரின் அசைவுகளுக்கு ஏற்ப குதிரை செயல்படுவதை குறிக்கும் ஒருவித போட்டி யாகும்.  இந்த போட்டியில் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த சாம்பி யன்களில், மிகவும் வெற்றி கரமான ரைடர்களில் ஒரு வரான சுப் சவுத்ரி 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அதேபோல் பிரணவ் தீபக் என்பவர் போட்டி அரங்கில் நுழைந்த போதிலும், தனது குதிரையான பேம்ஆப் வைபர்ட்டியுடன் ஒரு குறிப்பிடத்தக்க சாத னையைப் பதிவுசெய்து, குழுவில் தங்கப் பதக்கமும் மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.