districts

img

ஆவடி உபகோட்டம் மதிப்பீட்டு அலுவலர் பி.எஸ்.முனியாண்டி பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை துணைத் தலைவர், மின்சார வாரியம் ஆவடி உபகோட்டம் மதிப்பீட்டு அலுவலர் பி.எஸ்.முனியாண்டி பணி நிறைவு பாராட்டு விழா திருமுல்லைவாயிலில் மேற்கு கிளைத் தலைவர் எஸ்.தசரதன் தலைமையில் புதனன்று (ஜன. 31) நடைபெற்றது. மேற்கு கிளைச் செயலாளர் எஸ்.எஸ்.கணேஷ் ராவ்,  மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.அருள்செல்வன், மேற்கு கிளை செயலாளர் ஆர்.ராஜேஷ் கண்ணா, மண்டல செயலாளர் ஏ.முருகானந்தம், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மேற்கு கிளை செயலாளர் டி.கே.சம்பத்ராவ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில் நிர்மல் பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாயும், தீக்கதிர், மின் ஊழியர் மத்திய அமைப்பு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, சிஐடியு, சிபிஎம் ஆகிய அமைப்புகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், மின் கதிருக்கு 2 ஆயிரம் ரூபாயும் முனியாண்டி வழங்கினார்.