districts

சென்னை முக்கிய செய்திகள்

வாக்கு எண்ணிக்கை:  ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை, ஜூன் 2- மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப்பார்வையாளர்களை வீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வடசென்னை தொகுதிக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (ஐஏஎஸ்), ராஜேஸ்குமார் (எஸ்.சி.எஸ்.) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னை தொகுதிக்கு ஜிதேந்திரா ககுஸ்தே (எஸ்.சி.எஸ்.), டாக்டர் டி.சுரேஷ் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை தொகுதிக்கு முத்தாடா ரவிச்சந்திரா (ஐஏஎஸ்), முகமது சஃபிக் சக் (எஸ்.சி.எஸ்.) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காலமானார்

திருவள்ளூர்,ஜூன்.2- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பன்பாக்கம் சிபிஎம் கிளை செயலாளர் நாகராஜன்  மூத்த சகோதரி சுசிலா (வயது 60), உடல் நல குறைவால் காலமானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்ட செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், விதொச மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான பன்பாக்கத்தில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று (ஜூன்.2) அடக்கம் செய்யப்பட்டது.

காலமானார்

பொன்னேரி அருகில் உள்ள பஞ்செட்டி சிபிஎம் கிளை செயலாளர் ஜே.கே.விஜய் தாய் ஜெயம்மாள்  (வயது 70), காலமானார். அவரின் உடல் ஞாயிறன்று (ஜூன் 2) அடக்கம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், இ.தவமணி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.பஞ்செட்டியில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று அடக்கம் செய்யப்பட்டது.

2 கிலோ கஞ்சாவுடன் 2பேர் கைது  

கிருஷ்ணகிரி, ஜூன்2- கெலமங்கலம் காவல்துறையினர் ஜூஜூவாடி குடியூர் சாலையில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும்படி உலவிக் கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் அப்பகுதியை சேர்ந்த  ருத்ரன் (வயது25), மல்லேஷும் (36)  கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து  அவர்கள் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் மதிப்பி லான 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் இருவரை யும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: திரைப்பட தயாரிப்பாளர் கைது

சென்னை, ஜூன் 2- திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ் அயனம்பாக்கத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார்.  இந்த அலுவலகத்தில் கொரட்டூர் பகுதியை சேர்ந்த வீரலட்சுமி (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் லிங்கேஸ்வரி கடந்த மே 13ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் அளித்தார். இதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளலாம் என்று வலியுறுத்தினார்.  மேலும் தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து, என்னிடம் தவறாக நடந்து கொண்டதால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், சத்து மாத்திரைகள் என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சினிமா தயாரிப்பாளர் முகம்மது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.