districts

சென்னை முக்கிய செய்திகள்

என்எல்சியில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியதில் மோசடி: 2 பேர் சஸ்பெண்ட்

நெய்வேலி,அக்.13- தடையில்லா இல்லாத (என்ஓசி) சான்று வழங்கிய விவகாரம் தொடர் பாக, கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் காவல் நிலைய தலைமை காவலர் கைது செய்யப்பட்டார். மேலும், தனிப் படை காவலர் உள்ளிட்ட இருவர் தற்கா லிக பணியிடை நீக்கம் செய்யப்பட் டனர். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையப் பகுதி களுக்கு செல்ல நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். இதற்காக தொழி லாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் (என்ஓசி) பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில், ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் மீது வழக்கு உள்ள நிலையில் ஊ.மங்கலம் காவல் நிலை யத்தில் இருந்து ஆட்சேபனை இல்லாத சான்று வழங்கியுள்ளார். இதனை, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் குற்ற ப்பிரிவினர் கண்டறிந்து, கடலூர் எஸ்பி. ரா.ராஜாராம் கவனத்திற்குக் கொண்டு  சென்றுள்ளனர். இதையடுத்து, அவர் நெய்வேலி டிஎஸ்பி., சபியுல்லாவை விசாரணை நடத்துமாறு அறிவுறுத் தினார். இந்த விவகாரத்தில் ஊ.மங்கலம் காவல் நிலைய தலைமை காவலர் சுதா கரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நெய்வேலி டிஎஸ்பி., சபி யுல்லா விசாரணைக்கு அழைத்திருந் தார். அப்போது, எலி மருந்து குடித் துள்ளார். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்து வமனையில் சேர்த்தனர். தடையில்லா சான்று வழங்கியது தொடர்பாக தலைமை காவலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை (அக்.13) கைது செய்து சிறையில் அடைத் தனர். மேலும், இதற்கு உடந்தை யாக இருந்த எழுத்தர் ஜோசப், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கா மல் மறைத்த காரணத்திற்காக தனிப் பிரிவு காவலர் சங்குபாலன் ஆகிய இரு வரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

திருவள்ளூரில் பட்டாசுக்கடை வைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு 

திருவள்ளூர், அக். 13-  திருவள்ளூரில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணைய தளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடி பொருள் சட்டம் 1884 மற்றும் வெடி பொருள் விதிகள் 2008ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி இணையதளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலுள்ள (https://www.ineseval.tn.gov.in) இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். தற்காலிக பட்டாசு உரிமம் பெற திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை வட்டங்களிலிருந்து விண்ணப்பிப்போர் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம். ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி (பகுதி) மற்றும் திருவள்ளூர் (பகுதி) வட்டங்களிலிருந்து விண்ணப்பிப்போர் ஆவடி காவல் ஆணையரிடத்திலும் விண்ணப்பிக்கலாம். வரும் 19ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிபிஎம் கிளை மாநாடுகள்

சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கட்சியின் வேப்பூர் வட்டத்தில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள்.
நல்லூர் கிளை          -கே.அசோக் குமார்
நகர்             -எஸ்.இளையராஜா
பிஞ்சனூர்         - கே. கிருஷ்ணமூர்த்தி
சேப்பாக்கம்         -கே.பெரியசாமி
சாத்தியம்         - எஸ்.அன்பரசன்
நல்லூர் பெண்கள்     -பி.அகிலா
திருப்பயர்         -ஜி.ராமதாஸ்
சிறுபாக்கம்         -டி. ரத்தினசாமி
மங்களூர்         -கே.விக்னேஸ்வரன்
ஆதியூர்         -வி.தூண்டிக்காரன்
பெரிய நெல்லூர்     -ஏ.பி.செல்வி
கச்சிமைலூர்         -கே.செல்லதுரை
ஏ.சித்தூர்          -டி.சாந்தி
டி.புடையூர்         -பி.கலியமூர்த்தி
கண்டப்பன் குறிச்சி     -என்.மணிவாசகன்
வலசை         -எஸ்.சரத்குமார்
வண்ணாத்தூர்         –ராமானுஜம்