கிருஷ்ணகிரி, ஜூலை 8- 2024-25 கல்வி ஆண்டுக்கு அரசு விடுதியில் சேர விரும்பும் பட்டியலின மாணவர்கள் வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கே.எம்.சபையூர் உத்தரவிட்டுள்ளார். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் இடமிருந்து பெற்று முழுமையாக பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் ஆதிதிராவிடர் நல அலுவலர்கள் விடுதி வாரியாக பரிசளிக்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் இல்லாத பட்சத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், விண்ணப்பம் செய்தவர்கள் ஆலோசனை குழு மூலம் தேர்வு செய்யப்படுவர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால தாமதம் செய்யாமல் விடுதியில் சேர விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.