வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராணிப்பேட்டையில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். சாம்பசிவம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எ.எஸ். சங்கர், மாவட்டப் பொருளாளர் எஸ்.ஜி. தீபா, ஆற்காடு தாலுகா செயலாளர் ஜி. பாலு, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.