districts

பள்ளி பேருந்தில் குழந்தை பலியான வழக்கை மேல்முறையீடு செய்க! சிபிஎம் தென்சென்னை மாவட்டச்செயலாளர் வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 27 - தாம்பரம் தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து குழந்தை பலியான வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் ஸ்ருதி, சேலையூர் சீயோன் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 அன்று பள்ளிப் பேருந்தில் ஸ்ருதி வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது, ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து, ஏற்கெனவே, அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தார். அதேபேருந்தின் சக்கரம் ஏறி பரி தாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக, பள்ளி தாளாளர் விஜயன், அவரது சகோ தரர்கள் ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்து உரிமையாளர் யோகேஷ் சில்வேரா மற்றும் கிளீனரான 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கை, 10 ஆண்டுகளாக நடத்திய செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடு தலை செய்துள்ளது. இந்த தீர்ப்பானது பொதுச் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.