districts

img

பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கேட்டு பூண்டியில் காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர், ஆக 16- மழைக்காலங்களில் பழங்குடி இன மக்களை பள்ளிகளில் தங்க வைக்காமல்,  சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இருக்க   தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பூண்டி பிடிஒ அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஆக 16),  காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி  ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ்ந்தான் கோட்டையில் 19 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் மற்றும் நூறு நாள் அட்டை  வழங்க வேண்டும், அரியத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அப்துல் கலாம் நகர் 24  குடும்பங்களுக்கும், குன்னவலம் அடுத்த குப்பத்து பாளையத்தில் 18 வீடுகளுக்கு கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் 25  குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் மற்றும்  நூறு நாள் அட்டை வழங்க வேண்டும், திருப்பாச்சூர் வசந்தம் நகரில் 38 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் நூறு நாள் அட்டைகள், மெய்யூர் ஊராட்சிக்கு  உட்பட்ட வெம்பேடு இருளர் இனத்தை  சேர்ந்த 38 குடும்பங்களுக்கு தொகுப்பு  வீடுகள் வழங்க வேண்டும்,  ஆட்டரம்பாக் கத்தை அடுத்த கோவிந்தராஜ் குப்பம் எஸ்டி  பகுதியில்   48 தொகுப்பு  வீடுகள் வழங்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடனடியாக 3 நபர்களுக்கு நூறு நாள் அட்டைகள் வழங்கப்பட்டது. விண்ணப்பித்துள்ள அனை வருக்கும் வரும் திங்களன்று வழங்கப்படும், தொகுப்பு வீடுகள் அடுத்த 15 நாட்களில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, மகேஷ்பாபு ஆகியோர் தெரிவித்தனர். இதனால் காலை 10 மணிக்கு துவங்கிய காத்திருக்கும் போராட்டம் பகல் 12 மணியளவில் முடிவிற்கு வந்தது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய செயலா ளர் கே.முருகன் தலைமை தாங்கினார். இதில்  மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை,  மாவட்டத் தலைவர் ஜி.சின்ன துரை, மாவட்ட;க குழு உறுப்பினர்கள் பி.அற்புதம், கலையரசி, தேவி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வேட்டைக்காரன் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.டில்லி, விதொச நிர்வாகி மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.