சென்னை, ஜூலை 22 - உயர்கல்வி நிறுவனங்க ளில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 216க்கு மேற்பட்டோரும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 30க்கு மேற்பட்டோரும் மலக்குழிக்குள் இறங்கும் போது விஷவாயு தாக்கி இறந்தனர். எனவே, மலக்குழிக்குள் மனிதனை இறக்குவதை தடுக்க புதிய கருவிகளை கண்டுபிடிக்க, கட்டமைப்புகளை உரு வாக்க உயர் கல்வி நிறுவனங்களில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் திங்களன்று (ஜூலை 22) புரசைவாக்கத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விஷவாயு மரணங் களுக்கு சட்டப்படி ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், மனிதக் கழிவு களை அகற்றிட தொழிலாளர் களை பணிக்கு அமர்த்து வதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டத்தை (2013) செயல்படுத்த வேண்டும், துப்புரவு பணிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும், சென்னை புறநகர் பகுதி களில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அமைப்பின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் எம்.ஆர்.மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலச் செயலாளர் வேணி, மாவட்ட நிர்வாகிகள் ராஜ்குமார், ஜானகிராமன் (வடசென்னை), பி.சுந்தரம், பி.கே.மூர்த்தி, புகழேந்தி, எஸ்.மிருதுளா, விக்னேஷ் (மத்திய சென்னை), கே. மணிகண்டன், ச.லெனின், சுசீந்திரா (தென்சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.