districts

img

அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1.13 லட்சம் பறிமுதல்

சென்னை, ஏப். 26- புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 13 மணி நேரம் நடந்த லஞ்சஒழிப்பு சோதனையில் ரூ.1 லட்சத்து 13  ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புழல் ஜிஎன்டி சாலையில் புழல் ஒன்றிய ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு புள்ளிலைன், விளாங்காடுபாக்கம், தீர்த்தங்கரைபட்டு, கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், வடகரை  போன்ற 7 ஊராட்சிகளுக்கான அலுவலகப் பணிகள் இங்கு நடக்கும். இந்த அலுவல கத்தில் நில உறுதிப்படுத்துதல் சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சம்பத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் வியாழனன்று அதி காரிகள் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  ஒவ்வொரு அறையாக சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வட்டார  வளர்ச்சி அலுவலர் மணிசேகர் அறை யிலும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிபுரியும் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் பணத்தை கண்டெ டுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யார் மூலமாக பெறப்பட்டது? விசாரணை நடத்தினர். மேலும் ஆவணங்கள் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்படும் பிரிண்டர் மற்றும் நில உறுதிப்படுத்துவதற்கான பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்ற பதிவு அடங்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மாலை 3 மணியளவில் ஆரம்பித்த இந்த சோதனை நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது. இதில் ரூ.1.13 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப் பற்றப்பட்டுள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் தவறு செய்திருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால் இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பி டத்தக்கது.