விழுப்புரம், ஜூலை 25- செஞ்சி அருகே 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிலத்தில் குடியிருந்து வரும் மக்களின் வீடுகளை, நீதிமன்ற உத்தரவை காட்டி இடிக்க வந்த அதிகாரிகளை சிபிஎம் தலையீட்டால் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்திற்குட்பட்டது செவலபுரை கிராமம். இங்குள்ள குளத்துமேடு அரசு புறம்போக்கில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 93 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்ற னர். நீதிமன்ற உத்தரவை காட்டி கடந்த மாதம் வீடுகளை இடிக்க வந்த அதிகாரி களை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் பாதிக்கப் பட்டோர் முற்றுகையிட்டனர். அப்போது, மாற்று இடம் அளித்து விட்டு வீடுகளை இடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், திங்கட்கிழமை (ஜூலை 25) மீண்டும் நீதிமன்ற உத்தரவை காட்டி அந்த வீடுகளை இடிக்க முயன்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன், வட்டச் செயலாளர் டி.முருகன் ஆகியோர் அந்த மக்களுக்கு மாற்று இடம் அளித்து விட்டு வீடுகளை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் அமித், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிபிஎம் தலைவர்களு டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று இடம் அளிப்பதாக உறுதியளித்து எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர். இதில் வட்டக் குழு உறுப்பினர்கள் அரி ஹரகுமார், ரவி, சுப்பிரமணியன், ஏழுமலை, கார்த்தி, கிளைச் செயலாளர் கே.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வீடு இடிப்பின் போது சசிகலா என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி மருத்துவமனையில் அனுமதித்தனர்.