திருவண்ணாமலை, ஆக 1-
ஆடி மாத பவுர்ணமியை யொட்டி(ஆக.1) திரு வண்ணா மலை அண்ணா மலையார் கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து பாது காத்துக்கொள்ள கோவில் மூன்றாம் பிரகாரம், வைகுந்த வாசல் அருகே கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக நிழல் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பந்தல் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அடித்த லேசான காற்றில் சரிந்து விழுந்தது. அப்போது, பந்தலுக்கு கீழே நின்றுகொண்டிருந்த 5 பேர் காயமடைந்தனர். பெங்களூருவைச் சேர்ந்த துளசி (31) என்ற பெண்ணின் மண்டையில் நிழல் பந்தலின் இரும்பு பைப் விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்துக்கு நிழற்பந்தல் தரமில்லாமல் அமைக்கப்பட்டதே காரணம் என்று மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயிலுக்கு வெளியே, பலமணி நேரம் காத்துக் கிடந்த மக்களுக்கு குடிநீர், கழிவறை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் வெளியூர்களிலிருந்து வந்த மக்கள், கடுமை யாக பாதிப்புக்கு உள்ளா னார்கள்.