districts

img

கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்

சிதம்பரம், ஆக.11-

    வேளாண் துறை இளநிலை இறுதி ஆண்டு மாணவர்கள் விருத்தாசலம் வேளாண் அறிவியல் மையத்திற்கு சென்றனர். அங்கு வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடுகள், நோக்கம், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் , விவ சாயிகள், விரிவாக்க பணியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் பயிற்சி கள் பற்றி முனைவர் காயத்ரி விளக்கி கூறினார்.

     பிறகு, மாணவர்களுடன் நடத்தப் பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாண வர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டது.  

     அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கல்வி சுற்றுலா நிகழ்வில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி.ராஜ் பிரவீன், வேளாண் விரிவாக்கத் துறை பேராசிரியர் கள் முனைவர் ரெ. ஜெயா, முனைவர் சே. துரைராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.