சிதம்பரம், மே 11-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 2023-24-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளத்தை மே 11 அன்று பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன்தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக பதி வாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், புலமுதல்வர்கள், துறைத் தலைவர்கள், இயக்குநர்கள், மாணவர் சேர்க்கை பிரிவின் துணை இயக்குநர் பாலபாஸ்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், துணைவேந்தருக்கான நேர்முக செயலாளர் பாக்கியராஜ் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப் பங்கள் பற்றிய விவரங்களை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.6.2023 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.