பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டு 1967 வரை செங்கை மாவட்டம் என்பது மத்திய சென்னை பகுதி தவிர்த்து மேற்கே ஆந்திரா எல்லை வரையிலும் தெற்கே புதுச்சேரி வரையிலும் சைதாப்பேட்டையை தலைநகரமாக கொண்டிருந்தது. சுதந்திரப்போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியர் கைத்தறி தொழிலை நசுக்கிட எடுத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மத்தியில் காஞ்சி புரத்தில் கம்யூனிஸ்டாக இருந்த பக்தவச்சலம் மறைந்த தலைவர் கே.எஸ்.பார்த்தசாரதியின் தலைமையில் கைத்தறி நெசவாளர் சங்கத்தை உருவாக்கி எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். காங்கிரஸ்காரராக இருந்த கே.எஸ்.பார்த்த சாரதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைப்பட்டு தோழர்கள் என்.சங்கரய்யா, ஏ.எஸ்.கே.ஐய்யங்கார், ஜமதக்கனி போன்ற கம்யூனிஸ்ட் தலை வர்களால் ஈர்க்கப்பட்டு சிறையில் மார்க்சி யம் கற்று 1944ல் விடுதலையாகி வெளி வரும்போது ஒரு கம்யூனிஸ்டாக வந்தார்.
பின்னர் 1945ல் காஞ்சிபுரத்தில் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளை உருவானது. அதே காலகட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் பகுதியில் தொழிற்சங்க இயக்கமும் பொன்னேரி பகுதியில் நெசவாளர் மற்றும் விவசாயி கள் இயக்கமும் உருவானது. 1948ல் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் கம்யூ னிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. செங்கை மாவட்டத்தில் தோழர் கே.எஸ்.பார்த்தசாரதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 1952 ல் தான் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் தத்துவார்த்தப் பிரச்சனையால் பிளவு ஏற்பட்டபோது செங்கை மாவட்டத்திலிருந்த கே.எஸ்.பி உள்ளிட்ட தோழர்கள் மார்க்கிஸ்ட் கட்சியே சரியான இயக்கம் என தேர்வு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சென்னை செங்கை மாவட்டக்குழு என ஆரம்பத்தில் செயல்பட்டது. அப்போது மாவட்டச்செயலாளராக தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் பணியாற்றினார்.
செங்கொடி இயக்கத்தின் முன்னோடிகள்
செங்கை மாவட்டத்திற்குட்பட்ட பகுதி யில் பொன்னேரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று இடைக்கமிட்டிக்கள் உருவாகி செயல்பட்டு வந்தது, பின்னர் 1982 - ல் செங்கை மாவட்டக்குழு உருவாக்கப்பட்டு தனி அமைப்பாக செயல்பட்டது. அதன் மாவட்டச் செயலாளராக மறைந்த தோழர் டி.லட்சுமணன் பணியாற்றினார். மாவட்டத்தை தனி அமைப்பாக பிரிப்பதற்கு முன்னரே தோழர் பி.ஆர் பரமேஸ்வரன் செங்கை மாவட்டம் தனியாக செயல்படும் வகையில் முழுநேர ஊழியர்களையும் முன்னனி ஊழியர்களையும் திட்டமிட்டு உருவாக்கியிருந்தார். மறைந்த விவ சாயிகள் சங்கத் தலைவர்கள் ஜி.மணி, சி.ராதாகிருஷ்ணன் போன்றோர் அப்போது முன்னனி பாத்திரம் வகித்தனர்.
செங்கை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டபின்னர் கிராமப்புறங்களில் விவசாய சங்கங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக பொன்னேரி, கும்டிபூண்டி, பெரியபாளையம் பகுதியிலும் செங்கை, மதுராந்தகம், செய்யூர் பகுதியிலும் விவசாயிகள் இயக்கம் உருவாக்கி விஸ்தரிக்கப்பட்டது. தொழிற்சங்க இயக்கம் காஞ்சி நெசவாளர்கள் சங்கம், திருவள்ளூர் பகுதியிலும் கல்பாக்கம் மற்றும் மறைமலைநகர் பகுதியிலும் பொதுத் தொழிலாளர்கள் சங்கங்களும், படாளம் சர்க்கரை ஆலை தொழிற்சங்கமும் உருவக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் வெகு மக்கள் இயக்கங்களும் பரவலாக உருவானது. 1994 - ல் திருக்கழுக்குன்றம் பகுதியில் காரணை கிராமத்தில் பஞ்சமி நிலத்தை மீட்க தலித் பகுதிமக்கள் போராடியபோது செங்கல்பட்டில் அன்றைய அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி இருவரை கொன்றது. அதனை கண்டித்து அனைத்து கட்சியினைரையும் இணைத்து பந்த் உள்ளிட்ட கண்டன இயக்கம் நடத்தியது.
நிலப்பட்டா போராட்டம்கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் பயிரிட்டும் குடியிருந்தும் வரும் விவசாயிகளுக்கே பட்டா வழங்கிட வேண்டுமென 2004 ம் ஆண்டு முதல் 2007 ம் ஆண்டு வரை தொடர் போராட்டம் நடைபெற்றதின் விளைவாக செங்கல்பட்டு , மதுராந்தகம் , திருக்கழுக்குன்றம் திருப்போரூர் ஆகிய பகுதியில் கிராமங்களில் வீட்டுமனைப்பட்டாக்களும் நிலப்பட்டாவும் கிடைத்தன.
படாளம் சர்க்கரை ஆலை
2001 ம் ஆண்டு படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டதை ஒட்டி நமது கட்சியும் கரும்பு விவசாயிகள் சங்கமும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது உள்ளிட்ட களத்தில் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக 2011 ம் ஆண்டு முதல் சர்க்கரை ஆலை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பஞ்சமி நில மீட்பு போராட்டங்கள், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டங்கள், தச்சூர் தேவாலய தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக நடத்தியுள்ளோம்.
தடுப்பூசி
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசிகள் தயாரிக்கும் எச்பஎல் நிறுவனத்தை ஒன்றிய அரசு தனியாருக்கு தாரை வார்க்க இருந்ததை போராடி தடுத்து நிறுத்தி யுள்ளோம்.
தவிர்க்க முடியாத சக்தி
நமது செங்கை மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக செங்கொடி இயக்கம் வளர்ந்துள்ளது. இதனை மேலும் ஜன நாயக புரட்சியை நடத்தக்கூடிய மக்கள் பின்புலத்தோடு வளர்த்தெடுக்க 23 வது செங்கை மாவட்ட மாநாட்டில் சபதமேற்போம்.
-டி.கிருஷ்ணராஜ்
மாவட்டக்குழு உறுப்பினர்.