சென்னை, பிப். 6- குடிநீர் தொட்டியை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி ஆணையர், காவல்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி 14வது வார்டு மணிமேகலை தெரு, டாக்டர் சாலமன் தெரு சந்திப்பில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி இருந்தது. கடும் வறட்சி காலத்தில் கூட ஆழ்துளை கிணறு மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைத்து வந்தது. இதனால் பழைய பல்லாவரம் ராஜாஜி நகர், குளத்துமாநகர், மலகா னந்தபுரம், ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பல பகுதி மக்கள் பயனடைந்து வந்த னர். 20 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டியை செவ்வாயன்று (பிப்.4) அதிகாலையில் அடை யாளம் தெரியாத சமூக விரோத கும்பல் இடித்து தள்ளியுள்ளது. இது தொடர்பாக பல்லாவரம் காவல்நிலை யத்திலும், தாம்பரம் மாநக ராட்சி ஆணையரிடத்திலும் சிபிஎம் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், “ஆயி ரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்த குடிநீர் தொட்டியை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும். தொட்டியை உடைத்த சமூக விரோத கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.