districts

img

ஆனைவாடி-விண்ணுபட்டுக்கு பட்டா கேட்டு தர்ணா

திருவண்ணாமலை, ஆக.28-  திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா ஆனைவாடி பட்டியலின மக்கள் மற்றும் விண்ணுவாம்பட்டு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா நடைபெற்றது. கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  தாலுகா தலைவர் எஸ். பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. கே. வெங்கடேசன், டி. கே. வெங்கடேசன், எம். பிரகலநாதன், ஆர். அண்ணாமலை, பி. சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.