வேலூர் நவ 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலூர் மாவட்ட 24வது மாநாடு திருப்பத்தூரில் சனிக்கிழமை (நவ.16) செங்கொடி பேரணியுடன் உற்சாகமாக துவங்கியது. பேரணியை மாவட்டக்குழு உறுப்பினரும் மூத்த தோழருமான டி.ஜாபர் சாதிக் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டையொட்டி காட்பாடியிலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கொடியை மாவட்டத்தின் மூத்த தோழர் ஆர்.ஏ. லட்சுமணராஜா பெற்றுக் கொண்டார். வேலூர் வடக்கில் இருந்து தோழர் ஆர்.சாவித்திரி நினை வாக கொண்டுவரப்பட்ட சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பி. ராமச்சந்திரனும், குடியாத்தத்தில் இருந்து தோழர் ஜூடோ கே.கே. ரத்தினம் நினைவாக கொண்டு வரப்பட்ட சுடரை மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஆண்டாளும், அகரம் சேரியிலிருந்து தோழர் ப.சக்திவேல் நினைவாக கொண்டு வந்த சுடரை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரியும் பெற்றுக் கொண்டனர். பொது மாநாடு-கவுரவிப்பு மாநாட்டின் கொடியை ஆம்பூர் மூத்த தோழர் சி.ராஜா ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொது மாநாட்டிற்கு திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வரவேற்புக் குழு தலைவர் எஸ்.ஜோதி வரவேற்று பேசினார்.70 வயதை கடந்த 24க்கும் மேற்பட்ட தோழர்கள் கவுர விக்கப்பட்டனர். பொது மாநாடு பின்னர், பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது.தோழர்கள் கே.ஜெ.சீனிவாசன், எம்.இந்துமதி, பெ.திலீபன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாநாட்டை துவக்கிவைத்துப்பேசினார். ஸ்தாபன வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நிதிநிலை அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன் ஆகியோர் தாக்கல் செய்தனர். டிச.3 தர்ணா வேலூர்-திருப்பத்தூர் மாவட்ட த்தில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக திருப்பத்தூரில் சந்தன தொழிற்சாலை, குடி யாத்தத்தில் கைத்தறி ஜவுளி பூங்கா துவக்க வேண்டும்.மூடப்பட்ட ஆம்பூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். அரியூர் கூட்டுறவு நூற்பாலை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு கண்டு திறக்க வேண்டும். பாலாற்றில் தோல் மற்றும் தோல் பொருள் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 200 கிலோமீட்டர் செல்லும் பாலாற்றில் நிலத்தடி நீரை சேகரிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.