districts

img

சத்துணவுக் கூட சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர் படுகாயம்

கடலூர்,ஆக. 28- பாலூர் பள்ளி சத்துணவு கூடத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர் படு காயமடைந்தார். கடலூர் மாவட்டம், நெல்லிக் குப்பம் அடுத்த பாலூர் சன்னியாசி பேட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு கூடம் ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (55) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திங்கட்கிழமை (ஆக. 28) காலையில், சத்துணவு கூட்டத்திற்கு சென்ற ஊழியர் சாந்தி மாண வர்களுக்கு மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து சிமெண்ட் காரைகள் திடீரென்று பெயர்ந்து தலையில் விழுந்தது. அவரது கூச்சல் சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள், அவரை மீட்டு உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த சத்துணவு கூட்டத்தை இடித்துவிட்டு புதிய சத்துணவு கூடம் உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.