districts

img

நெல்மணிகளை உலர்த்த மாற்று இடம் தேவை...

 மதுராந்தகம் வட்டம், தேவத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட சாலைகளில் திடீரென நெல்மணிகளை அறுவடை செய்து கொண்டு வந்து சாலையில் கொட்டி காய வைப்பதால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இப்பகுதியில் விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. நெல்மணிகளை உலர்த்தவும் வாகன ஓட்டிகளை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.