districts

சென்னை முக்கிய செய்திகள்

அமோனியா வாயுக்கசிவு மண்டலக்குழு தலைவர் தனியரசு கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் ஆறுதல்

சென்னை, டிச. 27- சென்னை எண்ணூர் அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் செவ்வாய்க் கிழமை இரவு  ஏற்பட்ட அமோனியா வாயுக்கசி வால் பாதிக்கப்பட்ட மக்களை மண்டலக்குழு தலைவர் தனியரசு, சிபிஎம் கவுன்சிலர் ஜெயராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்பகுதியில் உள்ள சின்னகுப்பம், பெரிய குப்பம், தாழங்குப்பம்,  நெட்டுக்குப்பம், முகத்து வார குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் மக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாது காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஐஏஎஸ் அதிகாரி சமீரன், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனி யரசு, 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் விபத்து குறித்து கேட்டறிந்தனர். பின்னர் மண்டலக்குழு தலைவர் தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் ஆகியோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர்  எஸ்.கதிர்வேல், பகுதி குழு உறுப்பினர்கள் கே.வெங்கடய்யா, பார்த்த சாரதி ஆகியோர் உடனி ருந்தனர்.

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: கடலூரில் விழிப்புணர்வு ஊர்வலம்

கள்ளக்குறிச்சி, டிச.27- இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் டிச. 4 முதல் 13 வரை கடலூரில் நடைபெறுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் குறித்து ஊர்வலம், சென்னை ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தில் டிச. 4 முதல் 13 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவுள்ளது.  மேலும் இப்பணிகள் மற்றும் முகாமிற்கு கொண்டு வர வேண்டிய சான்றுகள் குறித்து www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அத்துடன், இந்த முகாமில் அதிக அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது  04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலொ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.