districts

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, ஆக.9

     கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறை சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. ஆக. 16 ஆம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் இந்த முகா மில், தமிழ்நாட்டின் முன் னணி தனியார் துறை நிறுவ னங்கள் மற்றும்உள்ளூர் வணிக நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.இதில் கல்வித்தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ஷர்வன்குமார் அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளார்.