districts

குடியேற முடியாத இடங்களுக்கு பட்டா வழங்கியிருந்தால் மாற்று இடம்

சென்னை,ஜன.14- வரும் நிதியாண்டு முதல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் ‘பெரிய பழுது பார்ப்பு’என்ற மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை வெளியிடுவதாக சட்டப்பேரவையில்  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து நடை பெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து பேசுகையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள்மீது 85 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.  இவற்றில் கொலை வழக்குகள் 25, அவற்றில் 24 வழக்குகளில் 33 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  இது தவிர, தமிழ்நாட்டில் தங்கிப் பணிபுரியும் வட மாநிலத் தொழி லாளர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு காவல் நிலையமும் சேகரிக்கின்றது. அவர்களை தமிழ்நாட்டில் பணியில் அமர்த்தும் மனித வள நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன.  வட மாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், சந்தே கத்திற்குரியோரை அடையாளம் கண்டு, அந்தந்த மாநிலங்களின் காவல்துறையினரிடமிருந்து தகவல்கள் மற்றும் உதவிகள் பெற்று மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.  

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார் என்றாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் படிக்காமல் பள்ளி களிலிருந்து தேர்ச்சி பெற முடியாது என்ற நிலையைக் கொண்டுவருவதற்குத்தான் கலைஞர், “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம் என்ற “தமிழ் மொழி கற்கும் சட்டத்தை” 13-6-2006 அன்று இயற்றி, தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார்.  எனவே இந்த அரசு, தனது தமிழ் காக்கும் பணிகளைத் தொடர்ந்து புதிய புதிய முன்னெடுப்புகளையெடுத்து வருகிறது. ‘நமக்கு நாமே’ திட்டத்தின்  கீழ் ஊராட்சிகளில் நடைமுறைப் படுத்த ப்பட்டுள்ளவாறு பேரூ ராட்சிகளிலும் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்கும் ஐந்தில் ஒரு பங்கு வழங்கப் படவேண்டுமென்று என்ற கோரிக்கைக்கும் முன்வைக்கப்  பட்டது. எனவே, பேரூராட்சி களில் மட்டுமல்ல; நகராட்சி களிலும் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும். கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கப் பட்ட வீட்டுமனைப் பட்டாக்க ளில் குறிப்பிட்டுள்ள பயனாளி கள் வீடுகட்டி குடியேற இய லாத வகையில் மேடு பள்ளங்க ளாகவும், சாலை வசதி இல்லா மலும் காணப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பட்டா இடங்களில் அவர்கள் வீடுகள் கட்டி குடியேறத்தக்க வகையில் இல்லாத இடங்களின் விவ ரங்களையெல்லாம் மாவட்டம் வாரியாக சேகரிக்கப்பட்டு, எந்தெந்த இடங்கள் தகுதியானவை என்பதையறிந்து, உடனடியாக அதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.