கள்ளக்குறிச்சி மாவட்டம்,காரனூரில் ஒன்றிய அரசின் ஏடிஐபி திட்டத்தின் கீழ் ஏஎல்எம்சிஓ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் சமூக வலுவூட்டல் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சனிக்கிழமையன்று (செப்.21) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளு உறுப்பினர் மலையரசன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.