கடலூர், டிச.29 - கடலூர் மாவட்டம், குறிஞ்சிப் பாடி மற்றும் கடலூர் மாவட்டங்க ளில் ஓடும் பரவனாற்றில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பு களை குறைக்கும் வண்ணம் ஆற்றின் குறுக்கே அரிவாள் மூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டுதல் மற்றும் கடலுக்கு புதிதாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெய் வேலி சுரங்கத்தில் இருந்து வெளி யேற்றப்படும் சுரங்க நீர் மற்றும் மழை நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் ஆகியவற்றை கொண்டு செல்லும் பரவனாறு மேல் பரவனாறு, நடு பரவனாறு மற்றும் கீழ் பரவனாறு என மொத்தம் 58.80 கி.மீ. தூரம் பயணித்து அரிவாள் மூக்கு வழியாக சென்று கடலூர் பழைய துறைமுகம் அருகில் கடலில் கலக்கிறது. வெள்ள காலங்களில் குறிப்பாக 35.00 கி.மீ தூரம் உள்ள கீழ் பரவனாறு தனது புவியியல் மற்றும் இடவியல் காரணமாக குறைந்தபட்ச சமன் மட்டம் உள்ளதால் இந்த ஆறு வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற இயலாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள் வெள்ள நீரில் மிதந்து பாதிப்படைவது, ஆற்றை சுற்றியுள்ள சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்படைந்து வருவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. மேலும் கடல் நீர் பின்னோக்கி வந்து சுமார் 25.00 கி.மீ தூரம் உப்பு நீராக மாற்றி விவசாயம் செய்ய இயலாத சூழல் இருந்து வந்தது. இவ்வாறு ஏற்படும் வெள்ளப் பெருக்கை விரைவாக கடலில் வடிய வைக்கும் பொருட்டு அருவாமூக்கு என்ற இடத்தில் கடைமடை ஒழுங்கியம் கட்டவும், மேலும் மேற்படி இடத்திலிருந்து 12.00 கி.மீட்டர் தூரம் சென்று ஆறு கடலில் கலப்பதை தவிர்த்து 1.60 கி.மீ., தூரத்தில் அருகாமையில் உள்ள கடலில் வெள்ள நீரை வெளி யேற்றும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் திட்டமிடப் பட்டது. மேலும், இத்திட்டம் செயல் படுவதற்கான நில ஆர்ஜித பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள்,
சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், சட்டமன்ற, மக்களவை உறுப்பின ர்கள் தொட ர்ந்து கோரிக்கை வை த்தனர். இந்த நிலையில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர், முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று இத்திட்டத்திற் கான நிதி ஒதுக்கீடு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.81.12 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இத்திட்டம் முடிக்க ப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோ. மாதவன் இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் கூறுகை யில்,“ குறிஞ்சிப்பாடி, கடலூர் வட்டங்களில் வெள்ளக் காலங்களில் போது பரவனாற்றில், என்எல்சி உபரி நீரால் மிகப்பெரிய அளவில் இழப்பும் பாதிப்பும் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க அரிவாள் மூக்கு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். இந்த நிலையில், அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தை சிபிஎம் சார்பில் வரவேற்கிறோம். மேலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.