districts

அல்லேரி மலையில் சாலை அமைக்க பணிகள் துவக்கம்

அணைக்கட்டு,ஜூலை 23-

      அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்திமரத்துகொல்லை மற்றும் ஆட்டுகொந்தரை மலை கிராமங்களில்  சிறுமி தனுஷ்கா மற்றும் சங்கர் ஆகியோர் அண்மையில் பாம்பு கடித்து உயிர் இழந்தனர் போதிய சாலை வசதி இருந்திருந்தால் இந்த உயிர்களை  காப்பாற்றி இருக்கலாம் என பொதுமக்கள் ஆதங்கப் பட்டனர்.

       இச்சம்பவத்தையொட்டி அல்லேரிமலைக்கு சாலை அமைக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல்கட்டமாக அல்லேரி மலை பகுதி யில் சாலை அமைப்பதற்காக வனத்துறை சார்பில் கொடுக் கப்பட்ட 3.2எக்டேர் நிலத்தினை 6.4 எக்டேர் அளவிற்கு வரு வாய் துறை மூலம் வனத்துறைக்கு அளவீடு செய்து கொடுக் கப்பட்டது. தார்சாலை அமைப்ப தற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வருவாய் துறை சார்பில் வழங்கப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம் என கூறினர். தற்போது வழங்கப்பட்டுள்ள இடம் பெரிய பாறைகள் மற்றும் ஓடைகளும் இருப்பதால் அதனை நாங்கள் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே பேரணாம் பட்டு அல்லது வேலூர் சரகத்தி ற்குட்பட்ட எல்லையில் சதுர மாக உள்ள நிலத்தை வழங்க வேண்டும் எனக்கூறினர். இதனால் சாலை அமைப்பதற்கு வனத்துறை சார்பில் அளிக்க ப்படும் தடையில்லா சான்று வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வனத்துறைக்கும் இடம் வழங்கும் பணியை விரைந்து முடிக்க வருவாய்த்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வருவாய்துறை அதிகாரி கள், வனத்துறையினருக்கு இடம் வழங்க வேலூர் காகி தப்பட்டறை பகுதியில் உள்ள மலையை தேர்வு செய்துள் ளனர். அதன்படி வருவாய்துறை மற்றும் வனத்துறையினர் காகிதப்பட்டறை மலைப்பகுதியை ஆய்வு செய்தனர்.