கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை திருத்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொன்னேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று (செப்.24) கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமையில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், ஏ.முகமது மீரா (தொமுச), ஜெயபால் (ஐஎன்டியுசி) , மயில்வாகனன்(ஏஐடியுசி), ஜானகிராமன் (எல்டியுசி) ஆகியோர் பேசினர்.